பதிவுகள்

தேடல்

அதிகாலை நேரம்  மனம் தேடும் உன்னை 
கண் விழி உன் முகம் காண தேடும்
இதயம் உன்னோடு சேர துடிக்கும் 
மீண்டும் ஒரு சிறு தூக்கம் உன் மடியில்
தலை சாய  வேண்டும் 
உன் கரம் பற்றினால் 
என் நெஞ்சில் எழும் விவேகம்

நண்பன்

நண்பன்  வந்ததை  அறிந்தேன் 
விழிகளில் காண துடித்தேன்
அன்பில் நெகிழ்ந்தேன் இதயத்தில்
பழகிய நாட்கள் நினைவுகளில்
பார்த்த கணம் நினைவிழந்தேன்
கரங்களில் அணைத்தேன். ......
பிரிந்த நாட்கள் நிகழ்ந்தவை அறிய
அறியாமல் போனது பொழுது
பொழுதும் சாய்ந்தது.......இருள் சூழ்ந்தது
மனம் சோர்ந்தது ...
பிரியும் நேரம் நெருங்க... பிரியம்
விடவில்லை பிரிய .........

அன்பு

ஊமை நான் அல்ல
பொய் பேச தவறியதால்
நட்பு நின்று விடாது
இரு மனம் பிரிவதால்
காதல் பொய்த்து விடாது
இரு உயிர் பிரிவதால்
உறவுகள் அறுந்து விடாது
மௌனம் காப்பதால்
தாயன்பு வெறுக்காது
மழலையின் தவறுதலால் ........

விதி

பூ மலரும் இயற்கை விதியால்
நான் மலர்வேன்  உன்னால் .......
வாழ்வில் நீ நிழல் ஆனாய்
உன் நிழல் என்னில்  தொடரும்
உன்னை சந்தித்தது விதியால்
நீ பிரிந்தது உன் மதியால் 
விதி வலுத்தது அதனால்
நான் செயல் பெறுவேன்  உன் பிரிவால்.............

நிலா நீ

என் செல்ல நிலா நீ
நான் வாழும் உலகை எனக்காக சுற்றும்

என் அன்பு நீ ...............
இரவில் வந்து பகலில் என்னை
பிரிவது ஏனோ

உன்னை காண  இரவுகள் விழித்தேன்
இரவில் மலரும் மல்லிகை துணை ஆனது
பகலில் உதிர்க்கும் சூரியன்   பகையானது

அம்மா

உன்னால்  உயர்த்தேன்
அன்பால்  வளந்தேன் ....
உன் பார்வையில் தவழ்ந்தேன்
தென்றலாய்  நடந்தேன் .....
உன் மடி தூங்கினேன்
உன் விழியில் கண் அசைந்தேன்
உன் பாசத்தில் என்றும் மழலை நான்
உன் சொல் என்றும் வேதம்
நீயே கண் கண்ட தெய்வம் 
அம்மா ...............

Vaanathin oruthalai kadhal

sigaram thotavargal silar

athai viyanthavargal palar

unnai rasithavargal palar

unn agam arinthavar yavaro?

neeum enaku puriyatha pithir

en manathai pola.

odum megangalai pola....

un agam kanna enaku vizhigal illai

nirangal illai unaku, karangalai alaigal

nilam meethu unaku kadhala?

un kadhal oiyavillai

uthayamum asthamum unnidam

anbum kobamum ennidam

unnai kaana ethanai alagu

unnai thoda than mudiyavillai

en kaneer valium maliye

neeyagiraai.........samuthirame.

alagu

முகிலின்   நிழலில்  புல்வெளி   அழகு 

எந்தன் இதயத்தில் நீ அழகு

 மழையின் சாரலில்  வானவில் அழகு

என் மனதில் உன் நினைவுகள் அழகு 

காற்றின் தாலாட்டில் பூக்கள் அழகு 

உந்தன் அன்பில் எல்லாம் அழகு 



Thunai

While nobody in the absence of
Support search while .....
To sit at the side
Gave comfort to your music
Will throw breez
I enjoy with no clouds in sky
Not only were you close to me .........

Thedal

உன் நிழல் தேடி சென்றேன்


நட்பு

நட்பு அமையும் நிமிடத்தில்
பூக்கள் மலருவதை போல்
சூரிய உதயம் தினம்
நம் முகம் மலர்வதை போல் 

நட்பின் காலம் ஆனந்தம்
அது பிரியும் காலம் வேதனை
பூக்கள்  உதிர்வதை போல்

சூரிய அஸ்தமனம் தினம்
நம் முகம் வாடுவதை போல்

நமக்குள் உதித்த நட்பு என்று வாழும்..........
எபோதும் நம் இருவர் மனதில் தழுவும்...

நட்பு அமைவது சிறப்பில்லை
அது நிலைப்பதே சிறப்பு..........

தேடுகிறேன்

மழை துளி பொழிகிறது
என்  விழிகள் நனைகிறது
உன் விழியை காணாமல்  

மேகங்கள் கருத்தன 
என் முகம் சிவந்தன
உன் முகம் காணாமல் 

இடிகள் விழுந்தன
என் இதயம் வெடித்தது
உன் குரல் கேட்காமல் ........

நிலவே தேடுகிறேன் உன்னை ............

ilakiren

இருந்தவை இருந்தது என்னிடம் 
இல்லாதவை அதிகம் இருந்தது

நீ வந்த போது  எல்லாம் கிடைத்தது 
நீ பிரிந்த போது  எல்லாம் இழக்கிறேன் 

நீ என் முகத்தில் கொண்டு வந்த 
என் சின்ன சின்ன சிரிப்புகளை இழக்கிறேன் 

நீ கொடுத்த சுதந்திரத்தை 
என் பேச்சில் இழக்கிறேன் 

நீ காட்டிய அன்பை 
என் இதயத்தில் இழக்கிறேன் 


பலன்

வினைகள் செய்த பலன் 
நீ என்னக்கு கிடைக்க வில்லை

கனவுகள் செய்த பலன்
உன்னை தவிர எல்லாம் கிடைத்தது 

காற்று வீசிய பலன் 
தூரத்தில் சென்றாய் 

தூறல் பொழிந்த பலன் 
நினைவுகளாய் அகுகில் வந்தாய் .....

நினைவில் நான்

என் விழிகள் ஏமாறவில்லை 
என் மனம் ஏமாறியது
என்னை நினைவில்லையா உனக்கு
என் நிழல் நீ தானே 

சுற்றி அலைகிறேன்

அடம் பிடிக்கிறது என் மனம்

இடம் வேண்டும் உன் உலகில்

நீ தொலைவில் சென்றாலும்

நீ காட்டிய அன்பு

என்னை சுற்றுகிறது இங்கே

தலை  சுற்றுகிறது  எனக்கு

இந்த  உலகம் சுற்றும் வேளையில்

உன்னை எங்கே நான் தேடுவேன்

உலகம் சுற்றியும்,,,, பல இடம் தேடியும்

நாம் சந்தித்த இடம் சுற்றி வருகிறது

நான் காத்திருக்கிறேன் உனக்காக

காத்திருக்க பொறுமை இல்லை மனதிற்கு

அடம் பிடிக்கிறது என் மனம்

உன்னையே  சுற்றுகிறது என் மனம்

இந்த பிரிவுக்கு விடை என்ன

மனம்  கேட்கிறது அவள் எங்கே என்று 

என் மனதிற்கு பதில் சொல்ல

சுற்றி சுற்றி அலைகிறேன்!!!!!!!

உன் நட்பை தேடி ...........................

விட்டு சென்ற தோழி

உன் நினைவுகளால் நான் சாய்ந்தேன்

நம் நட்பு என்றுஎன்றும் என்றாய் ......

நம் நட்பிற்கு பிரிவில்லை...........

வானம் போலே என்று மகிழ்ந்தேன் 

கனவோடு இருந்தேன்!!!!!!!!!!!

தோள் சாய்ந்து அழ, நீ இருகிறாய் என்று  

கனவுகள் உடைத்து விட்டாய்....

நீ  என்னுள் ஊட்டிய கனவுகள்

எல்லாம் எண்ணவாகும் தெரியவில்லை

நம் நட்பு வாழ்த்த உலகத்தை விட்டு

உன் தனிமை என்னும் உலகுக்கு

ஏன் சென்றாய்  தோழியே  

என் மீது கொண்ட நட்பை விட

உன்  தனிமையின் மீதுள்ள நட்பு

பெரிதென எண்ணுகிறாயா தோழியே ....

வருவாயா ?

எனக்காக வந்தாய் .....

எனக்காக  மகிழ்ந்தாய் ......

சில  நாளில் சென்றாய் ......

பல  நாள் காணவில்லை ......

எங்கே தேடுவேன் தெரியவில்லை .....

செல்லும் பாதையும் தெரியவில்லை .....

வாழ்வதற்கு  மனம் இல்லை  .....

நீ வாழும் உலகை பிரிந்து ...

செல்லவும்  மனம் இல்லை ...

சொல்லாமல் சென்றாய் ......

சொல்லாமல்  வருவாயா ?

எத்தனை அன்பு உன் மேல்

உருகினேன் உன்னை எண்ணி

வறுத்துகிறேன்   என் மனதை ........

கலங்கினேன்  உன்னை கண்ட கண்களால்

நடக்கிறேன் உன் திசையில்

தூங்குகிறேன் உன்னை பார்த்து கண்கள் மூடி

நினைக்கிறன்  உன்னை எபோளுதும்

வாழ்கிறேன்  உன் நினைவில்

உனக்கு  ஏன் தெரியவில்லை

எனக்கும்  ஏன் புரியவில்லை

உன்  மேல் எனக்கு எத்தனை அன்பு ........

மழை

வானம் பொழிந்த மழையில்
உடல்  குளிந்தது
நீ  காட்டிய அன்பில்
இதயம் குளிர்ந்து
கண் இமைக்கும் நேரத்தில் மனதினுள் சில..உங்கள் வருகைக்கு நன்றி !!!!!!!!!!!!!!!!!!

வலை பதிவு